புதன், 21 செப்டம்பர், 2016

வெண்பா - 20

வெண்பா - 20

தினமும் ஏன் இட்லியே தரீங்க, உணவு வேணாம் என மறுக்கும் பூரணிக்காக இவ்வெண்பா :)


இட்டு அவித்ததே நாளும் தருவதனால்
இட்டமில்லை  வேணாம் உணவு


இட்.டு                  அவித்.ததே               நா.ளும்           தரு.வத.னால்
நேர்.நேர்             நிரை.நிரை               நேர்.நேர்        நிரை.நிரை.நேர்
தே.மா                  கருவிளம்                   தே.மா            கரு.விளங்.காய்
 மா முன் நிரை வரின்   விளம் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
 இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை           இ. வெண்டளை            வெண்சீர் வெண்டளை


இட்.டமில்.லை         வே.ணாம்           உணவு
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்           நிரைபு
கூ.விளங்.காய்            தேமா               பிறப்பு
  காய்  முன் நேர்  வரின்   மா முன் நிரை வரின்
   வெ. வெண்டளை           இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை/அடி எதுகை  (இட்டு/இட்டமில்லை).
5.  ஈற்றுச்சீர் பிறப்பு.

[அப்பாடா, ஒரு வழியாக விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து சென்ற சில நாட்களாக 2/3 வெண்பாக்கள் எழுத வேண்டி இருந்தது. பிடித்தம் தான் எனினும், வேளைப் பளு காரணமாக இயலவில்லை, இருப்பினும் தினம் ஒன்று என்ற கணக்கிற்காக கஷ்டப்பட்டு எழுதினேன். அர்த்தமில்லாமல் அபத்தமாக இருந்தால் அது சிந்தனைக் குறைபாடே அன்றி வேறெதுவுமில்லை. மேம்படுத்திக்கொள்வேன் !]

- 21-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக