வியாழன், 29 செப்டம்பர், 2016

வெண்பா - 28

வெண்பா - 28

பொய்யை    தவிர்த்தலாகா   தென்றெண்ணி   அஃதை 
துறவிலே     வைத்தான்     அவன்.


பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர். அவையாவன
1. பொய் பேசுதல்,
2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
3. தீயசொற்களைப் பேசுதல்
4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.
இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.


பொய்.யை      தவிர்த்.தலா.கா           தென்.றெண்.ணி        அஃ.தை 
நேர்.நேர்        நிரை.நிரை.நேர்          நேர்.நேர்.நேர்           நேர்.நேர் 
தே.மா             கரு.விளங்.காய்           தே.மாங்.காய்            தே.மா 
மா முன் நிரை வரின்    காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்       மா முன் நிரை வரின்  
இயற்சீர் வெண்டளை   வெண்சீர் வெண்டளை        வெ. வெண்டளை      இ. வெண்டளை


துற.விலே           வைத்.தான்        அவன்
நிரை.நிரை        நேர்.நேர்             நிரை 
கரு.விளம்           தே.மா                 மலர் 
விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்  
இ. வெண்டளை            இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் மலர்.

- 29-09-2016

புதன், 28 செப்டம்பர், 2016

வெண்பா - 27

வெண்பா - 27

எவ்வினைக்கும் இங்கே எதிர்வினை உண்டென்பர் 
இவ்வுலகில் சிந்தித்து செய் 


எவ்.வினைக்.கும்           இங்.கே              எதிர்.வினை            உண்.டென்.பர் 
நேர்.நிரை.நேர்              நேர்.நேர்            நிரை.நிரை             நேர்.நேர்.நேர் 
கூ.விளங்.காய்                தே.மா                 கரு.விளம்             தே.மாங்.காய் 
காய் முன் நேர் வரின்      மா முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை    இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை      வெ. வெண்டளை

இவ்.வுல.கில்             சிந்.தித்.து               செய் 
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்.நேர்         நேர்
கூ.விளங்.காய்            தே.மாங்.காய்            நாள் 
காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
வெ. வெண்டளை           வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை/அடி எதுகை  (எவ்வினை/இவ்வுலகில்).
5.  ஈற்றுச்சீர் நாள்.

- 28-09-2016

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

வெண்பா - 26

வெண்பா - 26

கால்நூறு        காண்பதற்குள்    கண்ணெல்லாம்    கட்டுதடா
கால்பதிக்க    வேணும்     பல

[சப்பா, 25 வெண்பா எழுதி முடித்தாயிற்று, இதுக்கே முழிபிதுங்குதே, இது போதாதே, இன்னும் பல நூறு வெண்பாக்கள் எழுதினால் தானே வெண்பா எழுதுவது கைவரும்]

கால்.நூ.று             காண்.பதற்.குள்         கண்.ணெல்.லாம்      கட்.டுத.டா
நேர்.நேர்.நேர்       நேர்.நிரை.நேர்          நேர்.நேர்.நேர்           நேர்.நிரை.நேர்
தேமாங்காய்          கூவிளங்காய்               தேமாங்காய்             கூவிளங்காய்
காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை   வெ. வெண்டளை          வெ. வெண்டளை           வெ. வெண்டளை


கால்.பதிக்.க            வே.ணும்            பல
நேர்.நிரை.நேர்        நேர்.நேர்           நிரை
கூவிளங்காய்           தேமா                 மலர்
காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்
வெ. வெண்டளை           இயற்சீர் வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை / அடி  எதுகை  (கால்நூறு/கால்பதிக்க)
5.  ஈற்றுச்சீர் மலர்.

- 27-09-2016

திங்கள், 26 செப்டம்பர், 2016

வெண்பா - 25

வெண்பா - 25

நினைவெல்லாம்          ஒன்றிலே     ஒன்றி      உழைத்தால் 
நினைத்ததெல்லாம்     கைவரும்     பார்.


நினை.வெல்.லாம்      ஒன்.றிலே               ஒன்.றி                        உழைத்.தால் 
நிரை.நேர்.நேர்          நேர்.நிரை               நேர்.நேர்                   நிரை.நேர் 
புளி.மாங்.காய்            கூ.விளம்                 தே.மா                        புளி.மா 
காய் முன் நேர் வரின்    விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்  மா முன் நிரை வரின்
வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை          இ. வெண்டளை


நினைத்.ததெல்.லாம்    கை.வரும்       பார் 
நிரை.நிரை.நேர்            நேர்.நிரை      நேர்
கரு.விளங்.காய்              கூ.விளம்        நாள் 
    காய் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்
     வெ. வெண்டளை         இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை / அடி எதுகை  (நினைவெல்லாம் / நினைத்ததெல்லாம்)
5.  ஈற்றுச்சீர் நாள்.

- 26-09-2016

வெண்பா - 24

வெண்பா - 24

இல்லாள்    தனக்கென        இல்லாள்     எதிர்ப்பார்ப்பு 
இல்லாது    செய்திடுவாள்    அன்பு 

இல்.லாள்           தனக்.கென                இல்.லாள்            எதிர்ப்.பார்ப்.பு 
நேர்.நேர்            நிரை.நிரை                 நேர்.நேர்             நிரை.நேர்.நேர் 
தே.மா                கரு.விளம்                     தே.மா                புளி.மாங்.காய்
மா முன் நிரை வரின்  விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை          இ. வெண்டளை         வெண்சீர் வெண்டளை

இல்.லா.து              செய்.திடு.வாள்       அன்.பு 
நேர்.நேர்.நேர்        நேர்.நிரை.நேர்       நேர்பு 
தே.மாங்.காய்          கூ.விளங்.காய்        காசு
காய் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெ. வெண்டளை        வெ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. அடி மோனை/அடி எதுகை (இல்லாள்/இல்லாது)4.  ஈற்றுச்சீர் காசு.

- 25-09-2016

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வெண்பா - 23

வெண்பா - 23

சிக்கனமாய்    நீரை      செலவிடு   அச்செயலே 
இக்கணம்      தேவை    நமக்கு   


சிக்.கன.மாய்              நீ.ரை                செல.விடு                  அச்.செய.லே 
நேர்.நிரை.நேர்          நேர்.நேர்          நிரை.நிரை                நேர்.நிரை.நேர் 
கூ.விளங்.காய்            தே.மா              கரு.விளம்                   கூ.விளங்.காய்
காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்   விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை     இ. வெண்டளை       வெ. வெண்டளை

இக்.கணம்            தே.வை              நமக்.கு   
நேர்.நிரை             நேர்.நேர்           நிரைபு 
கூ.விளம்                தே.மா                பிறப்பு 
விளம் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
இ. வெண்டளை             இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை  (சிக்க/க்க).
5.  ஈற்றுச்சீர் பிறப்பு.

- 24-09-2016

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வெண்பா - 22

வெண்பா - 22

எளியதாம்  மூவேழு  நாட்கள்  தொடர

கடும்முயற்சி  தேவை  பிறகு

[வெண்பா-21-ல் சொன்ன மாதிரி 21 நாட்கள் தொடர்ந்தால் மட்டும் போதாது. உண்மையான சவாலே அதன் பின்னர் தான் இருக்கிறது. முதல் 21 நாட்கள் தேனிலவு காலம் போல அதீத ஆர்வத்தால் எளிதில் கைவந்துவிடும் எவ்வித பழக்கமும், பின்னர் தான் அதை தக்கவைத்துக்கொள்ள/பின்பற்ற பெருமுயற்சி தேவைப்படும்]


எளி.யதாம்         மூ.வே.ழு                           நாட்.கள்              தொட.ர
நிரை.நிரை        நேர்.நேர்.நேர்                  நேர்.நேர்              நிரை.நேர்
கரு.விளம்           தே.மாங்.காய்                  தே.மா                   புளி.மா
  விளம் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்   மா முன் நிரை வரின்
  இயற்சீர் வெண்டளை     வெண்சீர் வெண்டளை     இ. வெண்டளை        இ. வெண்டளை


கடும்.முயற்.சி           தே.வை               பிற.கு
நிரை.நிரை.நேர்         நேர்.நேர்            நிறைபு
கரு.விளங்.காய்           தே.மா                பிறப்பு
     காய் முன் நேர் வரின்     மா முன் நிரை வரின்
     வெ. வெண்டளை            இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் பிறப்பு.


- 23-09-2016

வியாழன், 22 செப்டம்பர், 2016

வெண்பா - 21

வெண்பா - 21

இருபதுக்கும் மேலொருநாள் ஒன்றை தொடர்ந்தால்
அதுவே பழக்கமாகும் காண்

இரு.பதுக்.கும்          மே.லொரு.நாள்             ஒன்.றை                   தொடர்ந்.தால்
நிரை.நிரை.நேர்       நேர்.நிரை.நேர்              நேர்.நேர்                   நிரை.நேர்
கருவிளங்காய்          கூவிளங்காய்                   தேமா                        புளிமா
    காய் முன் நேர் வரின்       காய் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்  மா முன் நிரை வரின்
   வெண்சீர் வெண்டளை      வெ. வெண்டளை       இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை

அது.வே              பழக்.கமா.கும்                காண்
நிரை.நேர்          நிரை.நிரை.நேர்             நேர்
புளிமா                கருவிளங்காய்                 நாள்
   மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
    இ. வெண்டளை          வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் நாள்.

- 22-09-2016

புதன், 21 செப்டம்பர், 2016

வெண்பா - 20

வெண்பா - 20

தினமும் ஏன் இட்லியே தரீங்க, உணவு வேணாம் என மறுக்கும் பூரணிக்காக இவ்வெண்பா :)


இட்டு அவித்ததே நாளும் தருவதனால்
இட்டமில்லை  வேணாம் உணவு


இட்.டு                  அவித்.ததே               நா.ளும்           தரு.வத.னால்
நேர்.நேர்             நிரை.நிரை               நேர்.நேர்        நிரை.நிரை.நேர்
தே.மா                  கருவிளம்                   தே.மா            கரு.விளங்.காய்
 மா முன் நிரை வரின்   விளம் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
 இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை           இ. வெண்டளை            வெண்சீர் வெண்டளை


இட்.டமில்.லை         வே.ணாம்           உணவு
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்           நிரைபு
கூ.விளங்.காய்            தேமா               பிறப்பு
  காய்  முன் நேர்  வரின்   மா முன் நிரை வரின்
   வெ. வெண்டளை           இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை/அடி எதுகை  (இட்டு/இட்டமில்லை).
5.  ஈற்றுச்சீர் பிறப்பு.

[அப்பாடா, ஒரு வழியாக விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து சென்ற சில நாட்களாக 2/3 வெண்பாக்கள் எழுத வேண்டி இருந்தது. பிடித்தம் தான் எனினும், வேளைப் பளு காரணமாக இயலவில்லை, இருப்பினும் தினம் ஒன்று என்ற கணக்கிற்காக கஷ்டப்பட்டு எழுதினேன். அர்த்தமில்லாமல் அபத்தமாக இருந்தால் அது சிந்தனைக் குறைபாடே அன்றி வேறெதுவுமில்லை. மேம்படுத்திக்கொள்வேன் !]

- 21-09-2016

வெண்பா - 19

வெண்பா - 19

நாவூறும் தீஞ்சுவையில்  தின்பண்டங்கள் நீதின்றால்
ஊனூறும் நோயும் மிகும்

நா.வூ.றும்                  தீஞ்.சுவை.யில்         பண்.டங்.கள்            நீ.தின்.றால்
நேர்.நேர்.நேர்          நேர்.நிரை.நேர்         நேர்.நேர்.நேர்          நேர்.நேர்.நேர்
தே.மாங்.காய்            கூ.விளங்.காய்          தே.மாங்.காய்           தே.மாங்.காய்
 காய் முன் நேர் வரின்       காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
 வெண்சீர் வெண்டளை      வெ.வெண்டளை          வெ.வெண்டளை          வெ.வெண்டளை


ஊ.னூ.றும்                நோ.யும்              மிகும்
நேர்.நேர்.நேர்          நேர்.நேர்            நிரை
தே.மாங்.காய்           தே.மா               மலர்
    காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்
    வெ.வெண்டளை           இயற்சீர் வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் மலர்.

- 20-09-2016


வெண்பா - 18

வெண்பா - 18

ஊறின   ஊறுகின்ற   ஊறும்   இனியுமது
ஊறுகாய்   காயத்துக்(கு)   ஊறு

ஊ.றின              ஊ.றுகின்.ற                      ஊ.றும்                  இனி.யும.து
நேர்.நிரை         நேர்.நிரை.நேர்                நேர்.நேர்              நிரை.நிரை.நேர்
கூ.விளம்            கூ.விளங்.காய்                 தே.மா                  கரு.விளங்.காய்
விளம் முன் நேர் வரின்   காய் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்    காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை     வெண்சீர் வெண்டளை   இ. வெண்டளை       வெ. வெண்டளை

ஊ.றுகாய்            கா.யத்.துக்(கு)           ஊறு
நேர்.நிரை           நேர்.நேர்.நேர்            நேர்பு
கூ.விளம்             தே.மாங்.காய்              காசு
  விளம் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்
  இ. வெண்டளை               வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  அடி மோனை  (றின/றுகாய்), பொழிப்பு மோனை (றின/ றும்)
4.  ஈற்றுச்சீர் காசு.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வெண்பா - 17

வெண்பா - 17

உன்கைவிரல் பற்றி நடந்திடும் பிள்ளைக்கு
உன்செயலால் முன்னின்று  காட்டு


உன்.கைவி.ரல்           பற்.றி                         நடந்.திடும்            பிள்.ளைக்.கு
நேர்.நிரை.நேர்          நேர்.நேர்                   நிரை.நிரை           நேர்.நேர்.நேர்
கூ.விளங்.காய்            தே.மா                       கரு.விளம்             தே.மாங்.காய்
  காய் முன் நேர் வரின்      மா முன் நிரை வரின்   விளம் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
  வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை    இ.வெண்டளை            வெ.வெண்டளை

உன்.செய.லால்          முன்.னின்.று              காட்டு
நேர்.நிரை.நேர்           நேர்.நேர்.நேர்          நேர்பு
கூ.விளங்.காய்             தே.மாங்.காய்           காசு
      காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
      வெ.வெண்டளை             வெ.வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  அடி மோனை / அடி எதுகை (உன்கையில்/உன்செயலால்)4.  ஈற்றுச்சீர் காசு.

- 18-09-2016

வெண்பா - 16

வெண்பா - 16

வருடங்கள் சென்றிடினும் தித்திக்கும் தேன்போல்
இனித்திடும் கோதையவள் நட்பு

[வருடம் என்பது வடமொழிச் சொல் என்பதனால் ஆண்டு என்றும் எழுத்தலாம், பல வடமொழிச் சொற்களை நம்மை அறியாமலே ஏற்றுக்கொண்டு விட்டோம், பிரித்தறிய முடியாத அளவிற்கு :(]

ஆண்டுகள் சென்றிடினும் தித்திக்கும் தேன்போல்
இனித்திடும் கோதையவள் நட்பு

ஆண்.டுகள்       சென்.றிடி.னும்          தித்.திக்.கும்           தேன்.போல்
நேர்.நிரை         நேர்.நிரை.நேர்        நேர்.நேர்.நேர்        நேர்.நேர்
கூ.விளம்            கூ.விளங்.காய்         தே.மாங்.காய்         தே.மா
விளம் முன் நேர் வரின்     காய்  முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
இயற்சீர் வெண்டளை      வெண்சீர் வெண்டளை    வெ. வெண்டளை        இ.வெண்டளை

இனித்.திடும்         கோ.தைய.வள்           நட்பு
நிரை.நிரை           நேர்.நிரை.நேர்          நேர்பு
கரு.விளம்             கூ.விளங்.காய்            காசு
    விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
     இ.வெண்டளை             வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் காசு.

- 17-09-2016

வெண்பா - 15

வெண்பா - 15

பதிவினை நாளும் படித்து கருத்தினைச்
சொல்லிடு! ஊக்கமளித் திடு!

பதி.வினை             நா.ளும்                  படித்.து               கருத்.தினைச்
நிரை.நிரை           நேர்.நேர்                நிரை.நேர்          நிரை.நிரை
கரு.விளம்             தே.மா                     புளி.மா               கரு.விளம்
விளம் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்    மா முன் நிரை வரின்     விளம் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை     இ. வெண்டளை          இ.வெண்டளை              இ.வெண்டளை

சொல்.லிடு               ஊக்.கம.ளித்           திடு
நேர்.நிரை                நேர்.நிரை.நேர்       நேர்பு
கூ.விளம்                  கூ.விளங்.காய்        காசு
     விளம் முன் நேர் வரின்   காய் முன் நேர் வரின்
     இ.வெண்டளை               வெண்சீர் வெண்டளை  

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. ஈற்றுச்சீர் காசு.

- 16-09-2016

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

வெண்பா - 14

வெண்பா - 14

சொல்லிற்கும் உன்செய லிற்குமுள்ள தூரமது
சொல்லிடும் நீயா ரென

சொல்.லிற்.கும்          உன்.செய             லிற்.குமுள்.ள          தூ.ரம.து
நேர்.நேர்.நேர்           நேர்.நிரை             நேர்.நிரை              நேர்.நேர்.நேர்
தே.மாங்.காய்            கூ.விளம்                கூ.விளம்                தே.மாங்.காய்
   காய் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்    விளம் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
   வெண்சீர் வெண்டளை    இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை             வெ. வெண்டளை

சொல்.லிடும்           நீ.யா                  ரென 
நேர்.நிரை              நேர்.நேர்            நிரை
கூ.விளம்                 தே.மா                மலர்
   விளம் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
   இ. வெண்டளை             இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. அடி மோனை, அடி எதுகை  (சொல்லிற்கும்/சொல்லிடும்)5. ஈற்றுச்சீர் மலர்.

- 15-09-2016

வெண்பா - 13

வெண்பா - 13

நிலத்திற்கு உண்டிங்கே  எல்லை நதிநீருக்
கெல்லை வகுத்தவர் யார்?

நிலத்.திற்.கு                 உண்.டிங்.கே            எல்.லை            நதி.நீ.ருக்
நிரை.நேர்.நேர்           நேர்.நேர்.நேர்          நேர்.நேர்          நிரை.நேர்.நேர் 
புளி.மாங்.காய்             தே.மாங்.காய்          தே.மா              புளி.மாங்.காய் 
  காய் முன் நேர் வரின்      காய் முன் நேர் வரின்   மா முன் நிரை  வரின்    காய் முன் நேர் வரின் 
  வெண்சீர் வெண்டளை    வெ. வெண்டளை        இயற்சீர் வெண்டளை    வெ. வெண்டளை

கெல்.லை           வகுத்.தவர்            யார்?
நேர்.நேர்             நிரை.நிரை          நேர் 
தே.மா                 கரு.விளம்             நாள் 
  மா முன் நிரை வரின்      விளம் முன் நேர் வரின் 
  இ. வெண்டளை             இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர்  நாள்.

[சில நாட்கள் ஊரில் இல்லாததால் தாமதம், விடுபட்ட நாட்களுக்கு சேர்த்து இன்று பதிவிடுகிறேன்].
- 14-09-2016

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெண்பா - 12

வெண்பா - 12

சுக்கோடு திப்பிலியும் கற்கண்டும் சேர்த்து
சளிக்கு இதமாய் குடி

சுக்.கோ.டு                    திப்.பிலி.யும்                     கற்.கண்.டும்                 சேர்த்.து
நேர்.நேர்.நேர்              நேர்.நிரை.நேர்               நேர்.நிரை.நேர்             நேர்.நேர்
தே.மாங்.காய்               கூ.விளங்.காய்                 கூ.விளங்.காய்              தே.மா
   காய் முன் நேர் வரின்         காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
   வெண்சீர் வெண்டளை        வெ. வெண்டளை          வெ. வெண்டளை       இயற்சீர் வெண்டளை

சளிக்.கு                        இத.மாய்                     குடி
நிரை.நேர்                     நிரை.நேர்                  நிரை
புளி.மா                          புளி.மா                        மலர்
      மா முன் நிரை வரின்    மா முன் நிரை வரின்
      இ. வெண்டளை            இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. ஈற்றுச்சீர் மலர்.

அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 13-09-2016

வெண்பா - 11

வெண்பா - 11

கண்ணருகே பூதமாகும் புள்ளியும் தூரத்தில்
காணாமல் போகும் உணர்.

கண்.ணரு.கே            பூ.தமா.கும்                 புள்.ளியும்              தூ.ரத்.தில்
நேர்.நிரை.நேர்          நேர்.நிரை.நேர்          நேர்.நிரை            நேர்.நேர்.நேர்
கூ.விளங்.காய்           கூ.விளங்.காய்            கூ.விளம்              தே.மாங்.காய்
   காய் முன் நேர் வரின்      காய் முன் நேர் வரின்  விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
   வெண்சீர் வெண்டளை    வெ. வெண்டளை       இயற்சீர் வெண்டளை   வெ. வெண்டளை

கா.ணா.மல்                போ.கும்                    உணர்
நேர்.நேர்.நேர்            நேர்.நேர்                  நிரை
தே.மாங்.காய்              தே.மா                      மலர்
     காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்
     வெ. வெண்டளை          இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. ஈற்றுச்சீர் மலர்.

அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 12-09-2016

வெண்பா - 10

வெண்பா - 10

பொன்னான நேரத்தை கொஞ்சம் மறுக்காமல்
கண்ணான கண்மணிக்கும் கொடு.

பொன்.னா.ன             நே.ரத்.தை               கொஞ்.சம்       மறுக்.கா.மல்
நேர்.நேர்.நேர்            நேர்.நேர்.நேர்         நேர்.நேர்          நிரை.நேர்.நேர்
தே.மாங்.காய்              தே.மாங்.காய்           தே.மா                புளி.மாங்.காய்
           காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
          வெண்சீர் வெண்டளை     வெ. வெண்டளை         இயற்சீர் வெண்டளை    வெ. வெண்டளை


கண்.ணா.ன               கண்.மணிக்.கும்      கொடு
நேர்.நேர்.நேர்             நேர்.நிரை.நேர்       நேர்பு
தே.மாங்.காய்              கூ.விளங்.காய்         காசு
        காய் முன் நேர் வரின்        காய் முன் நேர் வரின்
        வெ. வெண்டளை              வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர்  காசு.


அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 11-09-2016

வெண்பா - 9

வெண்பா - 9

முனைப்போடு நீயும் முயன்றிடு  பின்னர்
முடியாத தேதென கூறு


முனைப்.போ.டு             நீ.யும்                    முயன்.றிடு          பின்.னர்
நிரை.நேர்.நேர்            நேர்.நேர்              நிரை.நிரை        நேர்.நேர்
புளி.மாங்.காய்              தே.மா                   கரு.விளம்            தே.மா
         காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்    விளம் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின் 
       வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை     இ. வெண்டளை             இ. வெண்டளை

முடி.யா.த                   தே.தென           கூறு
நிரை.நேர்.நேர்          நேர்.நிரை         நேர்பு
புளி.மாங்.காய்             கரு.விளம்         காசு
         காய் முன் நேர் வரின்     விளம் முன் நேர் வரின்
          வெ. வெண்டளை          இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி  மோனை (முனை/முடி), பொழிப்பு மோனை (முனை/முயன்)

5. ஈற்றுச்சீர்  காசு.


அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 10-09-2016

வெண்பா - 8

வெண்பா - 8

களித்திடுவோம் நாற்பட்ட சோர்வை விரட்ட
வெளியூர்க்கு யாத்திரை சென்று.


களித்.திடு.வோம்             நாற்.பட்.ட                    சோர்.வை                   விரட்.ட
நிரை.நிரை.நேர்             நேர்.நேர்.நேர்               நேர்.நேர்                    நிரை.நேர்
கரு.விளங்.காய்               தே.மாங்.காய்                தே.மா                        புளி.மா
     காய் முன் நேர் வரின்            காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்      மா முன் நிரை வரின்
     வெண்சீர் வெண்டளை          வெ. வெண்டளை          இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை


வெளி.யூர்க்.கு                 யாத்.திரை                      சென்.று
நிரை.நேர்.நேர்               நேர்.நிரை                      நேர்பு
புளி.மாங்.காய்                 கூ.விளம்                        காசு
          காய் முன் நேர் வரின்         விளம் முன் நேர் வரின்
          வெ. வெண்டளை                இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை 
(களி/வெளி)
5. ஈற்றுச்சீர் 
காசு.


- 09-09-2016

வியாழன், 8 செப்டம்பர், 2016

வெண்பா - 7

வெண்பா - 7

பெற்றோரின் சண்டையில் சிக்கித் தவிப்பதவர்
பெற்றமக்கட் செல்வங்  கள்

பெற்.றோ.ரின்          சண்.டையில்             சிக்.கித்             தவிப்.பத.வர்
நேர்.நேர்.நேர்          நேர்.நிரை                  நேர்.நேர்           நிரை.நிரை.நேர்
தே.மாங்.காய்           கூ.விளம்                    தே.மா                கரு.விளங்.காய்
  காய் முன் நேர் வரின்    விளம் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்     காய் முன் நேர் வரின்
 வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை           வெ. வெண்டளை

பெற்.றமக்.கட்              செல்.வங்          களே 
நேர்.நிரை.நேர்             நேர்.நேர்         நிரை 
கூ.விளங்.காய்               தே.மா             மலர் 
  காய்  முன் நேர் வரின்     மா  முன் நிரை வரின்
    வெ. வெண்டளை             இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி  மோனை (பெற்றோரின் / பெற்றமக்), அடி எதுகை 
(பெற்றோரின் / பெற்றமக் )
5. ஈற்றுச்சீர் மலர்.


- 08-09-2016

புதன், 7 செப்டம்பர், 2016

வெண்பா - 6

வெண்பா - 6

கொஞ்சியே கிள்ளைமொழி பேசியே  நீயெனது
மிஞ்சிய கோபம் துடை


கொஞ்.சியே          கிள்.ளைமொ.ழி              பே.சியே              நீ.யென.து 
நேர்.நிரை              நேர்.நிரை.நேர்               நேர்.நிரை           நேர்.நிரை.நேர்
கூ.விளம்                கூ.விளங்.காய்                 கூ.விளம்             கூ.விளங்.காய்
விளம் முன் நேர் வரின்        காய் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்      காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை         வெண்சீர் வெண்டளை    இ. வெண்டளை            வெ. வெண்டளை

மிஞ்.சிய               கோ.பம்          துடை
நேர்.நிரை            நேர்.நேர்        நிரை
கூ.விளம்               தேமா             மலர்
விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்
இ. வெண்டளை             இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (கொஞ்சியே, மிஞ்சிய)
5. ஈற்றுச்சீர் மலர்.


- 07-09-2016

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

வெண்பா - 5

வெண்பா - 5

கண்கூசும்   வண்ண   நகப்பூச்சை   வாங்கிடுவார்
யாரென   கூறிடு    நீ


கண்.கூ.சும்                 வண்.ண                நகப்.பூச்.சை             வாங்.கிடு.வார்
நேர்.நேர்.நேர்             நேர்.நேர்              நிரை.நேர்.நேர்         நேர்.நிரை.நேர்
தே.மாங்.காய்              தே.மா                  புளி.மாங்.காய்           கூ.விளங்.காய்
     காய் முன் நேர் வரின்       மா முன் நிரை வரின்    காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
      வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை    வெ.வெண்டளை         வெ.வெண்டளை
 
யா.ரென                  கூ.றிடு                 நீ
நேர்.நிரை               நேர்.நிரை           நேர்
கூ.விளம்                  கூ.விளம்             நாள்
    விளம் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்
    இ.வெண்டளை              இ.வேண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் நாள்.


- 06-09-2016

திங்கள், 5 செப்டம்பர், 2016

வெண்பா - 4

வெண்பா - 4

தாய்மொழியில் பேசிடவும் பாடம் படித்திடவும்
வேண்டுமென சேய்க்கு உரை


தாய்.மொழி.யில்            பே.சிட.வும்                பா.டம்              படித்.திட.வும்
நேர்.நிரை.நேர்              நேர்.நிரை.நேர்         நேர்.நேர்          நிரை.நிரை.நேர்
கூ.விளங்.காய்                கூ.விளங்.காய்           தே.மா              கரு.விளங்.காய்
        காய் முன் நேர் வரின் - காய் முன் நேர் வரின் -  மா முன் நிரை வரின்  -    காய் முன் நேர் வரின்
     வெண்சீர் வெண்டளை -    வெ. வெண்டளை -   இயற்சீர்  வெண்டளை   - வெ. வெண்டளை



வேண்.டுமெ.ன          சேய்க்.கு     உரை 
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்    நிரை
கூ.விளங்.காய்           தே.மா        மலர்
        காய் முன் நேர் வரின் -  மா முன் நிரை வரின்
     வெண்சீர் வெண்டளை  - இ.வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் மலர்.

- 05-09-2016

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

வெண்பா - 3

வெண்பா - 3

நேர விரையமென நீநினைத் தாலதை
தூர நிறுத்தியே  வை


அசைப்பிரித்தல்:

நே     ர          விரை யமெ   ன
நேர் நேர்      நிரை   நிரை  நேர்
தே.மா           கரு.விளங்.காய்
        மா முன் நிரை வரின்
        இயற்சீர் வெண்டளை

விரை   யமெ  ன          நீ      நினைத்
நிரை   நிரை  நேர்      நேர்   நிரை
கரு.விளங்.காய்           கூ.விளம்
                  காய் முன் நேர் வரின்
                  வெண்சீர் வெண்டளை


நீ        நினைத்      தா     லதை
நேர்   நிரை           நேர்   நிரை
கூ.விளம்                கூ.விளம்
          விளம் முன் நேர் வரின்
           இயற்சீர் வெண்டளை

தா     லதை       தூ     ர
நேர்   நிரை        நேர்  நேர்
கூ.விளம்             தே.மா
          விளம் முன் நேர் வரின்
          இயற்சீர் வெண்டளை


தூ     ர          நிறுத்   தியே 
நேர்  நேர்     நிரை  நிரை
தே.மா           கரு.விளம்
       மா முன் நிரை வரின்
       இயற்சீர் வெண்டளை

நிறுத்   தியே       வை
நிரை  நிரை       நேர்
கரு.விளம்          நாள்
         விளம் முன் நேர் வரின்
          இயற்சீர் வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (நேர, தூர)
5. ஈற்றுச்சீர் நாள்.

- 04-09-2016.

சனி, 3 செப்டம்பர், 2016

வெண்பா - 2

வெண்பா - 2

ஓடி  ஒழிந்திட்ட  சொற்கள னைத்தையும்
தேடி  எடுத்துட்டு  வா


ஓ       டி           ஒழிந்   திட்   ட
நேர் நேர்         நிரை  நேர்  நேர்
தே.மா             புளி.மாங்.காய்
      மா முன் நிரை வரின்
      இயற்சீர் வெண்டளை

ஒழிந்   திட்   ட              சொற்  கள 
நிரை  நேர்  நேர்          நேர்     நிரை
புளி.மாங்.காய்               கூ.விளம்
           காய் முன் நேர் வரின்
           வெண்சீர் வெண்டளை

சொற்  கள          னைத்  தையும்
நேர்     நிரை        நேர்   நிரை
கூ.விளம்             கூ.விளம்
    விளம் முன் நேர் வரின்
    இயற்சீர் வெண்டளை
 
னைத்  தையும்     தே     டி
நேர்     நிரை        நேர்  நேர்
கூ.விளம்              தே.மா
      விளம் முன் நேர் வரின்
      இயற்சீர் வெண்டளை

தே    டி         எடுத்   துட்    டு
நேர் நேர்      நிரை   நேர்  நேர்
தே.மா           புளி.மாங்.காய்
      மா முன் நிரை வரின்
      இயற்சீர் வெண்டளை

எடுத்   துட்    டு            வா
நிரை   நேர்  நேர்        நேர்
புளி.மாங்.காய்             நாள்
      காய் முன் நேர் வரின்
      வெண்சீர் வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (ஓடி - தேடி).
5. ஈற்றுச்சீர் நாள்.


- 03-09-2016.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

வெண்பா - 1

வெண்பா - 1

சிறு திருத்தம்:

பரமபதம் வாழ்வதனை நாளும் கடக்க
பரம்பொருளை பற்றிடு நீ

முன்னம் எழுதிய குரல் வெண்பாவில் ஓரிடத்தில் தளை தட்டுகிறது

செய்யுளின் முதல் சீருக்கும் ஈற்றுச் சீருக்கும் தளை இல்லை. ஏனென்றால், முதல் சீரை வருஞ்சீராக  வைக்க நிலைச்சீர் ஏதுமில்லை அதுபோலவே ஈற்றுச் சீரை நிலைச் சீராக வைக்க வருஞ்சீர் ஏதுமில்லை. இதை நான் தப்பாக அர்த்தம் செய்துக்கொண்டு, முதல் அடியின் கடைசிச் சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் தளை இல்லை என நினைத்துக் கொண்டேன்.

நேற்று மறுபடியும் கி.வா.ஜ அவர்களின் "கவிபாடலாம்" நூலைப் படிக்கும் போது தான் புரிந்தது. அதனால் இந்த திருத்தம். ஏற்கனவே தவறாக எழுதிய வெண்பாவில் என்ன தவறென்று புரிந்து கொள்ள, அதில் திருத்தம் ஏதும் செய்யாமல் அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.



கடக்   க               பரம்     பொரு ளை
நிரை   நேர்          நிரை    நிரை   நேர்
        மா முன் நிரை வரின்      
        இயற்சீர் வெண்டளை    



~ * ~ * ~ * ~ * ~ * ~ * ~

பரமபதம் வாழ்வதனை நாளும் கடந்திட
பரம்பொருளை பற்றிடு நீ


அசை பிரித்திடல்:
பர        மப      தம்             வாழ்   வத      னை          நா    ளும்        கடந்   திட
நிரை   நிரை  நேர்            நேர்   நிரை   நேர்         நேர்  நேர்         நிரை   நிரை
கரு.விளங்.காய்                  கூ.விளங்.காய்             தே.மா              கரு.விளம்
                காய் முன் நேர் வரின்        காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
                வெண்சீர் வெண்டளை      வெண்சீர் வெண்டளை    இயற்சீர் வெண்டளை


பரம்  பொரு  ளை            பற்      றிடு                நீ
நிரை நிரை   நேர்             நேர்   நிரை            நேர்
கரு.விளங்.காய்                 கூ.விளம்                நாள்
             காய் முன் நேர் வரின்        விளம்  முன் நேர்  வரின்
             வெண்சீர் வெண்டளை      இயற்சீர் வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை, அடி எதுகை.
5. ஈற்றுச்சீர் நாள்.


- 02-09-2016.

தினம் ஒரு வெண்பா

மரபுக்கவிதைகள் எழுதுவது என்பது எளிதல்ல சவாலானது.

புதுக்கவிதைகளைப் போல வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதிட முடியாது.  புதுக்கவிதையில் எதுகை மோனைத் தொடையெல்லாம் எளிதில் கைவரும். விதிமுறைகள் ஏதும் கிடையாது.

மரபுக்கவிதைக்கென விதிமுறைகள் பல பின்பற்ற வேண்டும். தளை தட்டாமல் எழுத வேண்டும். அதற்குள் எதுகை மோனை உள்ளிட்ட தொடைகள் வைத்திட வேண்டும். ஒன்று கைவந்தால் மற்றொன்று உதைக்கும். எங்கே, சொல்ல வேண்டிய சேதியை இத்தனை சீர்களுக்குள் இந்த விதிகளின் படி சொல்லிவிடு பார்ப்போம் என அறைகூவல் விடுக்கும்.

மரபுக்கவிதையின் சுவையே அதன் விதிகள் தான் என்று நினைக்கிறேன்.

அதற்காக புதுக்கவிதையினை குறைத்து மதிப்படவில்லை.

ஆனால் மரபுக்கவிதையில் இலக்கண அறிவை மெருகேற்றலாம், வார்த்தைகள் பலவற்றை வசப்படுத்தலாம்.

இதற்காகவே யாப்பிலக்கணம் படிக்க ஆசைப்பட்டேன். ஏற்கனவே பல காலம் தள்ளிப்போட்ட காரியம் இது. அதற்கு இப்பொழுது தான் நேரம் ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். மாலை அலுவலகம் முடித்து வந்தப் பின், வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, இரவோடு இரவாக (கிட்டத்தட்ட அதிகாலை வரை) படித்து முடித்துவிட்டேன்.

யாப்பிலக்கணம் அடிப்படைகள் மற்றும் வெண்பா விதிமுறைகள் எல்லாம் இங்கிருக்கு - http://karpathu-tamil.blogspot.in/2016/09/blog-post_2.html

படித்தவுடன் எழுதிய முதல் வெண்பா இதோ:
http://karpathu-tamil.blogspot.in/2016/09/blog-post_17.html

தளை தட்டாமல் எழுதுவதற்குள் தலைச் சுற்றிப்போய்விட்டது :)
வார்த்தைகள் சிக்காமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் அதிகாலையில் கண்ணைக் கசக்கி எழுதியது, குறைகள் இருப்பினும் முதல் முயற்சி அது. பயிற்சி செய்யச் செய்யத் தானே எந்த திறமையும் மெருகேறும்.

இதை நாள்தோறும் தொடர "தினம் ஒரு வெண்பா"வாக பதிவிட போகிறேன்.

#365project என்ற யோசனை மூலம் இவ்வெண்ணத்தை வித்திட்ட நண்பர் சொக்கன் அவர்களுக்கு நன்றியுடன், இதைத் தொடரப் போகிறேன்.


தமிழ்த் தாய்க்கொரு வெண்பா:

பூமாலை சூட்டிடுவேன் நானுனக்கு நல்லவெண்
பாமாலை கட்டி நிதம்.